தமிழக போலீசாரை தாக்கிய வழக்கு: ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராம் மனைவி மஞ்சு கைது
தமிழக போலீசாரை தாக்கிய வழக்கில் ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராம் மனைவி மஞ்சு கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: தமிழக தனிப்படை போலீசாரைத் தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வரும் கொலையாளி மற்றும் கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சு கைது செய்யப்பட்டார்.
சென்னை கொளத்தூர் நகை கடையில் நாதுராம் தலைமையிலான கொள்ளை கும்பல் கொள்ளை அடித்துவிட்டு ராஜஸ்தானுக்கு ஓடிப் போனது. இந்த கொள்ளை கும்பலைப் பிடிக்க சென்னை தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றிருந்தனர்.

நாதுராம் உள்ளிட்ட கொலையாளிகள் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி மரணமடைந்தார். பெரியபாண்டியின் மரணம் தமிழகத்தை உலுக்கியது.
இந்நிலையில் கொள்ளை கும்பல் நாதுராம் தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கின்றான். அவனது கூட்டாளிகள் பலரும் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். தற்போது நாதுராமின் மனைவி மஞ்சும் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications