அயோத்தியில் பாபர் மசூதியின் பூட்டுகளை அன்று திறந்துவிட்ட ராஜீவ்காந்தி
டெல்லி: நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த அயோத்தி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1985-ல் பாபர் மசூதியின் பூட்டுகளை திறந்தது முக்கியமான ஒரு சம்பவம்.
1984-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம் தொடங்கப்பட்டது. அதுவரை பல்வேறு நீதிமன்றங்களில் அயோத்தி வழக்குகள் நிலுவையில் இருந்தன.
1949-ல் பாபர் மசூதிக்குள் கடவுள் சிலைகள் வைக்கப்பட்ட போது பிரச்சனையை கட்டுப்படுத்த அந்த இடத்துக்கு பூட்டு போடப்பட்டது. இப்பூட்டை திறந்து மசூதிக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதும் இந்து அமைப்புகளின் கோரிக்கையாக இருந்து வந்தது.

ரத யாத்திரை
இந்த கோரிக்கையை முன்வைத்து 1984-ல் பீகாரில் இருந்து ஒரு ரதயாத்திரை டெல்லி நோக்கி சென்றது. இந்த யாத்திரை டெல்லியை சென்றடைந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

ஷாபானு வழக்கு விவரம்
இதையடுத்து இந்த ரதயாத்திரை முடிவுக்கு வந்தது. பின்னர் பொதுத்தேர்தலில் வென்று ராஜீவ் காந்தி பிரதமரானார். அப்போதுதான் பிரசித்திபெற்ற ஷாபானு வழக்கு நடைபெற்றது.

ஷாபானு- ஜீவனாம்சம்
ஷாபானு என்கிற இஸ்லாமிய பெண், 1970களில் தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்ட கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி மத்திய பிரதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் ஷா பானுவுக்கு ரூ179.25 பைசா ஜீவானாம்சம் வழங்க உத்தரவிட்டது.

ஷாபானு வழக்கு தீர்ப்பு
இதை எதிர்த்து ஷா பானு கணவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. ஷா பானு வழக்கின் தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் அழுத்தத்தை ஏற்று முஸ்லிம் பெண்களுக்கான ஜீவனாம்சம் தொடர்பான ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி தாக்கல் செய்தார்.

பாபர் மசூதி பூட்டுகள்
ஆனால் இதனை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருந்தது. இதே காலகட்டத்தில், 1986-ம் ஆண்டு பாபர் மசூதியின் கதவுகளை திறக்க வேண்டும் என்பதற்காக இந்து அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன.

ராஜீவ் காந்தி தலையீடு
பாபர் மசூதியின் பூட்டை நாங்களே திறப்போம் என்கிற கோரிக்கை பலமாக ஒலித்தது. ஷா பானு விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவானர் என்கிற நிலை உருவாகிவிட்டதால் இப்போது ராஜீவ் காந்தி இந்துக்களுக்கு ஆதரவாக காட்டிக் கொள்ள அயோத்தி விவகாரத்தில் தலையிட நேர்ந்தது.

மசூதியின் பூட்டுகள் திறப்பு
பாபர் மசூதியின் பூட்டுகளை நீதிமன்ற அனுமதியுடன் திறக்க வகை செய்யும் சட்ட நடவடிக்கைகள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட்டன. அயோத்தியில் பாபர் மசூதியின் பூட்டுகள் நீதிமன்ற உத்தரவுடன் திறக்கப்பட்டன. இதற்கு பின்னர் மக்களை கோவில்- மசூதி சார்ந்து அணி திரட்டும் அரசியல் பணிகளும் அதிதீவிரமடைந்தன.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications