For Daily Alerts
Just In
பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை தமிழக அரசின் கைகளில்... உச்சநீதிமன்றம்
ராஜீவ்கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கை ரத்து செய்யக்கோரும் விசாரனை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசின் தலைமை வழகிறஞர் விவாதத்தை நிராகரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
தூக்கு தண்டனை கைதிகளின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தூக்கு தண்டனை கைதிகளின் மனநிலை பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மூவரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டனர்.
தமிழக அரசின் கைகளில்
மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதேபோல மூவரின் விடுதலைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
English summary
The Supreme Court on Tuesday commuted the death penalty of former prime minister Rajiv Gandhi's assassins to life imprisonment. The death sentence has been commuted on grounds of delay in deciding their mercy plea.
Story first published: Tuesday, February 18, 2014, 13:21 [IST]