பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களே தங்களை இந்தியாவுடன் இணைக்க கோருவார்கள்: ராஜ்நாத் சிங் பேச்சு
கொல்கத்தா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சொல்லப்படும் பகுதி நம்முடையது என்றும் அங்குள்ள மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்கள் எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது. இந்த பகுதி பாகிஸ்தானின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. ஆனால் இந்த பகுதி இந்தியாவுடன் நிச்சயம் ஒரு நாள் இணைக்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இதற்கு பாகிஸ்தானும் சீனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என குறிக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் தற்போது வரை ஏற்கவில்லை.

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் லோக்சபா தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராஜ்நாத் சிங், இவ்வாறு பேசியுள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது, "இந்தியாவில் அடைந்து வரும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களே நம்முடன் இருக்க வேண்டும் என்று கோருவார்கள். பாதுகாப்புத் துறையில் இந்தியா மாபெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
இந்தியா வளர்வதையும், நமது பொருளாதாரம் சர்வதேச அளவில் வேகமாக முன்னேறி வருவதையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நம்மை யாரும் வெல்ல முடியாத இடத்தை தற்போது அடைந்திருக்கிறோம். அதே நேரம் மற்றவர்களின் விவகாரங்களில் நாம் தலையிட மாட்டோம். ஆனால், அவர்கள் தலையிட்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்னும் சில நாட்களில் உலகின் முதல் மூன்று மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடிக்கும்" என்று கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் என்று கூறியிருந்தார். இப்போது ராஜ்நாத் சிங்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் எனக் கூறியுள்ளார்.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications