தொடர் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்!

நாடாளுமன்ற இரு சபைகளும் முற்பகல் 11 மணிக்கு கூடியது. அப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை, விலைவாசி உயர்வு, தெலுங்கானா விவகாரம் ஆகியவை தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் சபைகளில் ஒரே கூச்சல், குழப்பம் நீடித்தது. இதைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் முடங்கின. இதனால் நாடாளுமன்ற இரு சபைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் 12 மணிக்கு சபைகள் கூடிய போதும் எம்.பிக்களின் அமளி நீடித்தது. அமளிக்கு இடையே ராஜ்யசபாவில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை தாக்கலானது. ஆனாலும் சபை நடவடிக்கைகளை தொடர இயலவில்லை. இதனால் லோக்சபா நடவடிக்கைகள் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
ராஜ்யசபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் 2 மணிக்கு சபை கூடியபோதும் அமளி ஓயவில்லை. இதனால் நாள் முழுவதும் ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
முன்னதாக ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்குதேசம் எம்;பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சி எம்.பிக்களும் இணைந்து கொண்டனர்.











Click it and Unblock the Notifications