தமிழக மீனவர் சுட்டுப் படுகொலை… வெளியுறவு அமைச்சருடன் திருச்சி சிவா அவசர சந்திப்பு
தமிழக மீனவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ராஜ்ய சபா எம்பி திருச்சி சிவா இன்று வெளியுறவுத் துறை அமைச்சரை அவசரமாக சந்தித்துப் பேசினார்.
டெல்லி: தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திமுக எம்பி திருச்சி சிவா இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் அக்பரை சந்தித்து வலியுறுத்தினார்.
கடந்த 6ம் தேதி இரவு, ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ, கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அக்பரை திமுகவைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்பி திருச்சி சிவா இன்று நேரில் சந்தித்தார். அப்போது, தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் சிவா வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் திருச்சி சிவா பேசும் போது, மீன்பிடிக்க செல்லும்போது தமிழக மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.
மேலும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவது வேதனை தருகிறது என்று கூறிய திருச்சி சிவா, இலங்கை கடற்படை மறுத்தாலும் அவர்கள்தான் தமிழக மீனவரை சுட்டிருக்க வேண்டும் என்று உறுதியாக கூறினார்.
மேலும், மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் மீனவர் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து விளக்கம் தருவார் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் திருச்சி சிவா தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications