தமிழக மீனவர் சுட்டுப் படுகொலை… வெளியுறவு அமைச்சருடன் திருச்சி சிவா அவசர சந்திப்பு
தமிழக மீனவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ராஜ்ய சபா எம்பி திருச்சி சிவா இன்று வெளியுறவுத் துறை அமைச்சரை அவசரமாக சந்தித்துப் பேசினார்.
டெல்லி: தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திமுக எம்பி திருச்சி சிவா இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் அக்பரை சந்தித்து வலியுறுத்தினார்.
கடந்த 6ம் தேதி இரவு, ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ, கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அக்பரை திமுகவைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்பி திருச்சி சிவா இன்று நேரில் சந்தித்தார். அப்போது, தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் சிவா வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் திருச்சி சிவா பேசும் போது, மீன்பிடிக்க செல்லும்போது தமிழக மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.
மேலும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவது வேதனை தருகிறது என்று கூறிய திருச்சி சிவா, இலங்கை கடற்படை மறுத்தாலும் அவர்கள்தான் தமிழக மீனவரை சுட்டிருக்க வேண்டும் என்று உறுதியாக கூறினார்.
மேலும், மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் மீனவர் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து விளக்கம் தருவார் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் திருச்சி சிவா தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications