ராம் ரஹீம் சிங் பல பெண்களை சீரழித்துள்ளார்: பாதிக்கப்பட்ட பெண் பரபர பேட்டி
சன்டிகர்: சாமியார் ராம் ரஹீம் சிங் பல பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் துணிச்சலாக பேட்டி அளித்துள்ளார்.
அந்த பெண் கூறியிருப்பதாவது,

தேரா
எங்கள் குடும்பத்திற்கும் தேராவுக்கும் 40 ஆண்டு பழக்கம். நான் தேரா நடத்தும் பள்ளியில் ஆசிரியையாக இருந்தேன். ராம் ரஹீம் சிங் அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார்.

பலாத்காரம்
ராம் ரஹீம் சிங் இருந்த குகையை பாதுகாக்க பெண்களை வெளியே நிறுத்துவார். நானும் அந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறேன். அவர் என்னையும் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து என் பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் ராம் ரஹீம் சிங்கிற்கு பயந்து என்னை எங்கள் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட்டனர். பின்னர் 2001ம் ஆண்டு என் மொத்த குடும்பமும் தேராவில் இருந்து வெளியேறியது.

மிரட்டல்
பாலியல் பலாத்காரம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று ராம் ரஹீமின் ஆட்கள் எங்களை மிரட்டி வந்தனர். சமூகத்தின் பெயர் கெட்டுவிடும் என்று பாதிக்கப்பட்ட பிற பெண்கள் யாரும் வாய் திறக்கவில்லை.

சகோதரர்
ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது குறித்து பிரதமர் மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு யாரோ கடிதம் அனுப்பினர். அது என் சகோதரர் என்று சந்தேகப்பட்டு 2002ம் ஆண்டு ராம் ரஹீம் சிங்கின் அடியாட்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டனர் என்றார் அந்த பெண். அந்த கடிதத்தால் தான் ராம் ரஹீம் சிங் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications