பெரிய மாநிலமான உ.பியில் பலாத்காரம் இயல்பானதுதான்: சமாஜ்வாடி தலைவர் பேச்சால் புது சர்ச்சை
லக்னோ: உத்தரபிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் நடப்பது இயல்பானதுதான் என்று ஆளும் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மோசின் கான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமாஜ்வாடி தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களால் நொந்துபோயுள்ள உ.பி மக்கள் இவரது பேச்சால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், வாயில் ஆசிட் ஊற்றி பெண் கொல்லப்பட்டார். உச்சகட்டமாக, பெண் நீதிபதியே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
உ.பி.யில் பெண்களுக்கு எதிராக தினம் ஒரு மோசமான சம்பவங்கள் நடப்பதால் பாஜக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. உ.பியில் குடியரசு தலைவர் ஆட்சி வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கைவிடுத்து வருகிறது.
ஆனால் ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவோ, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஆண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள் என்று கூறியிருந்தார். மாநில முதல்வர் அகிலேஷ் யாதவோ, எல்லா மாநிலத்திலும் இப்படித்தான் நடக்கிறது என்று கூறியிருந்தார்.
சமாஜ்வாடி கட்சியினரின் இந்த பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று அக்கட்சியின் மூத்த தலைவர் மோசின்கான் கூறுகையில், "காதலர்கள் தங்களுக்குள் உடல் ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டு பிரச்சினை என்று வரும்போது பாலியல் பலாத்காரம் என்று அதை புகாராக அளிக்கிறார்கள்.
இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு உதாரணமாக எடுக்க கூடாது. உத்தரபிரதேசம் மிகப்பெரிய மாநிலம். எனவே பலாத்காரம் ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கும். இதில் அரசை குறை கூறவழியில்லை. மீடியாக்கள் நாட்டின் பிற பகுதியில் நடக்கும் சம்பவங்களை மறைத்துவிட்டு உத்தரபிரதேசத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications