சொந்தக்கட்சி எம்எல்ஏ கொலை: லாலு ஆதரவாளருக்கு ஆயுள் தண்டனை!
சொந்தக்கட்சி எம்எல்ஏவை கொலை செய்த வழக்கில் லாலு பிரசாத்தின் ஆதரவாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாட்னா: சொந்தக்கட்சி எம்எல்ஏவை கொலை செய்த வழக்கில் லாலு பிரசாத்தின் ஆதரவாளரும் முன்னாள் எம்பியுமான பிரபுநாத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரபுநாத் சிங் மற்றும் அவரது சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அசோக் சிங் என்ற சொந்த கட்சி எம்.எல்.ஏவை கொலை செய்த வழக்கில் பிரபு நாத்திற்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1995 ல் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ அசோக் சிங்கை கொலை செய்ததாக பிரபு நாத் சிங் மற்றும் அவரது 2 சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த வாரம் பிரபு நாத் அவரது 2 சகோதரர்கள் குற்றவாளி என ஹசாரிபாக் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து 23ஆம் தேதியான இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலை முன்னாள் எம்பியும் லாலுபிரசாத்தின் தீவிர ஆதரவாளருமான பிரபு நாத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹசாரிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பிரபு நாத் சிங் மற்றும் அவரது 2 சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆயுள் தண்டனை பெற்றுள்ள பிரபுநாத் சிங் 4 முறை எம்பியாக இருந்தவர். 22 ஆண்டுகள் நடைபெற்ற இந்த கொலை வழக்கில் தற்போது ஹசாரிபாக் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications