சொந்தக்கட்சி எம்எல்ஏ கொலை: லாலு ஆதரவாளருக்கு ஆயுள் தண்டனை!
சொந்தக்கட்சி எம்எல்ஏவை கொலை செய்த வழக்கில் லாலு பிரசாத்தின் ஆதரவாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாட்னா: சொந்தக்கட்சி எம்எல்ஏவை கொலை செய்த வழக்கில் லாலு பிரசாத்தின் ஆதரவாளரும் முன்னாள் எம்பியுமான பிரபுநாத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரபுநாத் சிங் மற்றும் அவரது சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அசோக் சிங் என்ற சொந்த கட்சி எம்.எல்.ஏவை கொலை செய்த வழக்கில் பிரபு நாத்திற்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1995 ல் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ அசோக் சிங்கை கொலை செய்ததாக பிரபு நாத் சிங் மற்றும் அவரது 2 சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த வாரம் பிரபு நாத் அவரது 2 சகோதரர்கள் குற்றவாளி என ஹசாரிபாக் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து 23ஆம் தேதியான இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலை முன்னாள் எம்பியும் லாலுபிரசாத்தின் தீவிர ஆதரவாளருமான பிரபு நாத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹசாரிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பிரபு நாத் சிங் மற்றும் அவரது 2 சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆயுள் தண்டனை பெற்றுள்ள பிரபுநாத் சிங் 4 முறை எம்பியாக இருந்தவர். 22 ஆண்டுகள் நடைபெற்ற இந்த கொலை வழக்கில் தற்போது ஹசாரிபாக் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications