ஆந்திரா டூ பர்மா பார்டர் வழியாக சீனா போகும் செம்மரக் கடத்தலின் பாதை
திருப்பதி: 12 தமிழர் உட்பட 20 அப்பாவி தொழிலாளர்களின் உயிரை காவு வாங்கியிருக்கும் 'செம்மரக் கடத்தல்' தொழிலின் பிரதான மையமாக விளங்குவது மணிப்பூர் மாநிலம் தான்..
ஆந்திராவின் சேசாலம் வனப்பகுதியில் உலகிலேயே தரம் வாய்ந்த செம்மரங்கள் உள்ளன. இந்த சேசாலம் வனப்பகுதிதான் செம்மரக் கடத்தல் கும்பலின் பிரதான இலக்கு.
செம்மரக் கடத்தலில் சீனா மாபியாக்களே அதிகம் என்கிறது உளவுத் துறை. 2013 ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல்களை வைத்திருந்ததாக 55 சீனா நாட்டவரை இந்திய போலீசார் கைது செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் வெட்டப்படும் செம்மரங்கள் டெல்லி மற்றும் மும்பைக்கு தரை வழியே கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 2013ஆம் ஆண்டு மொத்தம் 30 ஆயிரம் கிலோ செம்மரங்கள் டெல்லி, மும்பை விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் டெல்லி விமான நிலையத்தில் மட்டும் 18 ஆயிரம் கிலோ செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மணிப்பூர் மாநிலமும் செம்மரக் கடத்தலில் முக்கிய இடம் வகிக்கிறது.
ஆந்திராவில் வெட்டப்படும் செம்மரங்கள் மணிப்பூர் மாநிலம் கொண்டு செல்லப்படுகிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து பர்மா செல்கிற இம்பால்- மோரே பாதைதான் செம்மரக் கடத்தலின் பிரதான பாதையாகவும் இருக்கிறது.
இந்த பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு வெட்டிக் கடத்தப்படும் செம்மரங்களை பறிமுதல் செய்வதும் பிரதான பணியாகஇருக்கிறது. ஒருவழியாக தப்பித்து மோரேவுக்குள் வந்துவிடும் செம்மரங்கள் பர்மா கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கிருந்து சீனாவுக்கு கடத்தப்படுகிறது.
இந்த பாதையில் எளிதாக தங்களுக்கு செம்மரங்கள் கிடைத்தும் என்பது சீனா மாபியாக்களின் எதிர்பார்ப்பு... தென்கிழக்காசியாவில் நுழைவாயிலாக கருதப்படும் மோரே நகரம்... செம்மரக் கடத்தல் மையம் என்கிற கரும்புள்ளியுடனும் இருந்தும் வருகிறது என்பது கசப்பான உண்மை..












Click it and Unblock the Notifications