அறை தர மறுத்த மும்பை ஹோட்டல்கள்... இரவு முழுவதும் பிளாட்பார்மில் தவித்த பாகிஸ்தான் குடும்பம்!
மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் குடும்பத்தினருக்கு ஹோட்டல்களில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியர்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பையின் பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்ஹாவிற்கு 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து வந்திருந்தது. இந்நிலையில் மும்பையின் ஒரு ஹோட்டல் கூட அவர்களுக்கு தங்குவதற்கு இடம் தரவில்லை.
இரவு நேரம் என்பதால் ஜோத்பூரில் உள்ள சொந்தக்காரர்கள் வீட்டிற்கும் செல்ல முடியாத காரணத்தினால் 3 பெண்களும், ஒரு சிறுவனும் அடங்கிய அந்தக் குடும்பம் நடைபாதையிலேயே இரவு முழுவதும் தங்கியுள்ளது.
கடந்த வாரம் இந்தியா வந்த அக்குடும்பம், ஜோத்பூரில் உள்ள அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கி வந்துள்ளது. ஹாஜி அலி தர்ஹாவிற்கும், பாலிவுட் ஹீரோ சல்மான் கானைக் காண்பதற்குமே அவர்கள் மும்பை வந்துள்ளனர்.
ஹாஜி அலி தர்ஹா சென்றபின் தங்க இடம் தேடிய பொழுதுதான் பிரச்சினை துவங்கியுள்ளது. "ஒரு ஹோட்டலின் அருகில் என் குடும்பத்தினை நிறுத்தி விட்டு இடம் தேடினால் மாலை வரை எந்த ஹோட்டலிலும், லாட்ஜிலும் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை" என்று அக்குடும்ப உறுப்பினரான ஷகீல் அமீது என்பவர் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணான நூர் பானு கூறுகையில், "நாங்கள் மும்பை நகரத்தையோ, காவல் துறையையோ மற்றும் பொது மக்களையோ குற்றம் சொல்லவில்லை. எங்களுக்கு தங்க ஏன் ஹோட்டல்களில் அறை தரவில்லை என்று தான் புகார் கூறுகிறோம். நாங்கள் பஜ்ரங்கி பைஜான் படத்தினைப் பார்த்து சல்மான் கானுக்கு மிகப்பெரிய விசிறிகள் ஆகிவிட்டோம். அதனால்தான் அவரை பார்க்க வந்தோம். ஆனால், இந்த சோகமான விஷயத்தால் நாங்கள் தற்போது ஊர் திரும்ப உள்ளோம்" என்று தெரிவித்தார்.
"ஒன்றிரண்டு பேர் செய்யும் தவறுகளுக்காக எல்லா பாகிஸ்தானியரும் கெட்டவர்கள் என்று நினைத்து விடாதீர்கள்" என்று அமீது சோகத்துடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications