வேலைக்கார சிறுமியை நிற்க வைத்து விட்டு தான் மட்டும் சாப்பிட்ட ரேணுகா சவுத்ரி!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுதிரி தனது குடும்பத்துடன் ஹோட்டலில் சாப்பிட்டது ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில் என்ன சர்ச்சை...?. ரேணுகா சவுத்ரி வீட்டு வேலைக்கார சிறுமியை ஓரமாக நிற்க வைத்து விட்டு சவுத்ரி குடும்பத்தினர் மட்டும் சாப்பிட்டதுதான் சர்ச்சைக்குக் காரணம்.
இப்போதெல்லாம் சரச்சைகள் எப்படி வரும் என்பதை யாராலுமே ஊகிக்க முடிவதில்லை. தெரிந்தோ, தெரியாமலோ பல பிரபலங்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ரேணுகா சவுத்ரி தனது குடும்பத்தினருடன் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயுள்ளார். அவர்களுடன் அவர்கள் வீட்டு வேலைக்காரச் சிறுமியும் உடன் போயுள்ளார். அங்கு ரேணுகா குடும்பத்தினர் உட்கார்ந்து ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுள்ளனர். ஆனால் வேலைக்காரச் சிறுமி, ரேணுகா அருகிலேயே நின்றபடி இருந்துள்ளார். அவர் சாப்பிட்டது போலத் தெரியவில்லை.
இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. வேலைக்காரச் சிறுமியை பார்க்க வைத்து விட்டு ரேணுகா குடும்பத்தினர் மட்டும் சாப்பிட்டது என்ன வகையான நாகரீகம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மத்திய மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ரேணுகா சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications