36 ஆண்டுக்குப் பின் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி.. ஆனால் அதற்குக் காரணமான கேப்டன் டிஸ்மிஸ்!
டெல்லி: சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில், மோசமான செயல்பாடு மற்றும் அணுகுமுறை காரணமாக அந்த அணியின் கேப்டன் ரீது ராணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள், பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோ நகரில் அடுத்தமாதம் 5ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டியில் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக ரீது ராணி ஆகும்.
அதன் தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள உத்தேச மகளிர் அணிக்கான பயிற்சி முகாம் பெங்களூரில் நடைபெற்றது. அது சனிக்கிழமையோடு முடிந்தது. 16 பேர் கொண்ட இறுதி அணி வரும் 12-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், மோசமான செயல்பாடு மற்றும் அணுகுமுறை காரணமாக இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரீது ராணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை அவர் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இது குறித்து அணி நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ரீது ராணி, ஒலிம்பிக் அணியில் இல்லை என்பது உண்மைதான். மோசமான செயல்பாடு மற்றும் அணுகுமுறை காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரிடம் ஏற்கெனவே கூறினோம். ஆனால் அவர் தனது தவறை திருத்திக் கொள்ளவில்லை. இதையடுத்து அவரை பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றிவிட்டோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ரா கூறுகையில், "அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவிப்பது சரியாக இருக்காது. இது தொடர்பாக வரும் 12-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆடவர், மகளிர் அணிகளுக்கான கேப்டன் மற்றும் துணை கேப்டன் தொடர்பான பரிந்துரைகளையும் அணி நிர்வாகம் அளித்துள்ளது. அது குறித்து வரும் 11-ஆம் தேதி முடிவெடுக்கப்படும்" என்றார்.
ஆனால், அணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக ரீது ராணி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரீது ராணியின் இந்த அதிரடி நீக்கத்தால் ஹாக்கி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications