இந்துத்துவா குறித்த மோகன் பகவத்தின் கருத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்
டெல்லி: இந்துத்துவாதான் வாழ்க்கை முறை.. இந்தியர்களை ஒருங்கிணைக்கக் கூடியது.. இந்தியாவில் வாழ்பவர்களை இந்துக்கள் என்று ஏன் அழைப்பதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகதவ் பேசியதற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன.
ஒடிஷாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத், ஜெர்மனியில் வாழ்வோரை ஜெர்மானியர்கள் என்று அழைக்கிறார்கள்.. இங்கிலாந்தில் வாழ்வோரை இங்கிலாந்து நாட்டவர் என்று அழைக்கும் போது இந்துஸ்தானத்தில் வாழ்பவர்களை இந்துக்கள் என்று அழைப்பதில்லையே என்று கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் இந்திய அரசியல் சாசனத்தை முதலில் படிக்க வேண்டும். இந்தியா என்பது பல கலாசாரங்களைக் கொண்ட நாடு. இந்தியா அல்லது பாரத் என்றுதான் அரசியல் சாசனம் இந்த நாட்டை குறிப்பிடுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவும், இந்தியா ஒன்றும் இந்துத்துவா கருத்தியலை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படியான கருத்துகள் மக்களை பிளவுபடுத்தவே செய்யும். இத்தகைய கருத்துகளைப் பரப்புவதை ஆர்.எஸ்.எஸ். கைவிட வேண்டும். நாட்டின் அரசியல் சாசனத்தையும் வரலாறையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். தாங்கள் நினைக்கிற வரலாற்றையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எழுதிவிட முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications