மக்கள் தொகை.. "மைனாரிட்டி" எல்லாம் "மெஜாரிட்டி" ஆகிட்டாங்க.. சாதுக்கள் சபை தலைவர் சர்ச்சை பேச்சு!
சிறுபான்மையினர் குறித்து சாதுக்கள் சபை தலைவர் சர்ச்சை பேட்டி தந்துள்ளார்
அலகாபாத்: "நாட்டில் சிறுபான்மையினர் எல்லாம் பெரும்பான்மையினராகி வருகின்றனர்... மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படாமல் அதிகரிப்பதே இதற்கான காரணம்" என்று சாதுக்கள் சபையின் தலைவர் தெரிவித்த கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளது.
அகில இந்திய அஹாடா பரிஷத் என்ற அமைப்பு ஒன்று உள்ளது.. நாடு முழுவதும் உள்ள சாதுக்களின் தலைமை சபையாக இது கருதப்படுகிறது.. இந்த அகில இந்திய அஹாடா பரிஷத் அமைப்பின் தலைவர் பெயர் மஹந்த் நரேந்திர கிரி.

இவர் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது: "மதம் என்ற பெயரில் இந்து கடவுள்களை அவமதிப்பது இந்தியா முழுதும் அதிகமாகி வருகிறது.. மக்கள் தொகையை கட்டுப்படுத்தப்படாமல் அதிகரிப்பதே இதுக்கு முக்கிய காரணம்.
இதனால்தான், நாட்டில் சிறுபான்மையினர் எல்லாம் பெரும்பான்மையினராகி வருகிறார்கள்.. இதைத்தடுத்து உடனடியாக நிறுத்த அனைத்து தரப்பினருக்கும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்... மக்கள் தொகை அதிகரிப்பது என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகும்... அதனால், எல்லாருமே மக்கள் தொகை கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.
சிறுபான்மையினர் எண்ணிக்கை குறித்து சாதுக்கள் சபையின் தலைவர் கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது.. அத்துடன் கடுமையான எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.












Click it and Unblock the Notifications