ஓரே வருஷத்திலேயே சல்மான்கான் தங்கை திருமண வாழ்க்கையில் விரிசல்?
டெல்லி: சல்மான்கானின் 'ராக்கி' தங்கை ஸ்வேதாவின் மண வாழ்வு ஒரு வருடத்திலேயே கசந்துவிட்டதாக கூறப்படுகிறது. தம்பதிகள் எந்த நேரத்திலும் பிரியலாம் என்று பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
நடிகர் சல்மான்கான் வீட்டிலேயே வளர்ப்பு தங்கையாக வளர்ந்தவர் அர்பிதா கான். அவருக்கும் டெல்லியை தொழிலதிபர் ஆயுஷ் ஷர்மா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதைப்போலவே, கடந்த வருடம் நவம்பர் மாதம் 3ம் தேதி கோவாவில் வைத்து சல்மான்கானின் ராக்கி தங்கை, ஸ்வேதாவுக்கும், புல்கிட் சாம்ராட் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

வருடந்தோறும், ரக்ஷா பந்தன் பண்டிகையின்போது சல்மானுக்கு ஸ்வேதா ராக்கி கட்டுவதை வழக்கமாக கொண்டவர் என்பதால் அவர் ஆதர்ஷ தங்கையாக இருந்துவந்தார். எனவே அவரது திருமணத்தின்போது, சல்மான்கானும் அவரது சகோதரரும், கோவா சென்று வாழ்த்தினர். சல்மான்கான்தான், ஸ்வேதாவுக்கு கன்னியாதானம் செய்து கொடுத்தார்.
இந்நிலையில், ஓராண்டிலேயே ஸ்வேதா திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தம்பதிகள் போடும் சண்டை, பக்கத்து வீடு வரை கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, அதிகாரப்பூர்வமாக தகவல் இல்லை எனினும், பாலிவுட் வட்டாரங்கள் அவ்வாறே கூறுகின்றன.












Click it and Unblock the Notifications