எங்களை விட்டு ஏன் தாத்தா போனீங்க.. காந்தி சிலை முன்பு குமுறிக் குமுறி அழுத சமாஜ்வாடி தலைவர்!
Recommended Video
லக்னோ: எங்களை விட்டு எங்கே போனீர்கள் என கேட்டு காந்தி சமாதியில் சமாஜ்வாதி தலைவர் ஃபெரோஸ் கான் குலுங்கி குலுங்கி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் அமைதி பேரணி, அஞ்சலி செலுத்துவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் காந்தியின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
உத்தரப்பிரதேசத்தில் சம்பல் நகரில் சந்தௌசி கோட்வாலி பகுதியில் பஃவாரா சவுக்கில் உள்ள காந்தி சிலை முன்பு சமாஜ்வாதி கட்சியினர் திரண்டனர். அப்போது காந்தி சிலைக்கு அக்கட்சியின் தலைவர் பெஃரோஸ் கான் மரியாதை செலுத்தினார்.
வீட்ல ஏன் சரக்கு இல்லை.. எகிறி எகிறி.. என்னா அடி.. அப்பாவை உதைத்த குடிகார மகன்.. வைரல் வீடியோ
ஃபெரோஸ் கான்
அப்போது அவரை செய்தியாளர்கள் படம் பிடிப்பதை அறிந்த ஃபெரோஸ் கான் காந்தியின் சிலைக்கு முன்பு விழுந்து வணங்கி குலுங்கி குலுங்கி அழுதார். மேலும் எங்களை விட்டு எங்கே சென்றீர்கள். பெரிய நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்து விட்டு எங்களை தனியாக விட்டுவிட்டீர்களே.
ஆதரவாளர்கள்
எங்களது ஆசைகள் மெல்ல மெல்ல நிராசையாகிறது என கூறினார். பின்னர் கீழே குனிந்து கண்களை துடைத்தார். ஆனால் அவரது கண்ணீரை யாராலும் வீடியோவாக எடுக்க முடியவில்லை. எனினும் அவரது ஆதரவாளர்கள் அவரை தேற்ற முயற்சித்தனர்.
வைரல்
அப்போது அவரது உதவியாளரும் காந்தி காந்தி என அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஃபெரோஸ் கானை ட்ரோல் செய்து வருகின்றனர். எத்தனை பெரிய டிராமா என கிண்டல் செய்கின்றனர்.
|
நீலிக்கண்ணீர்
காந்தி ஜெயந்திக்கு மாலை அணிவித்தோமா, மரியாதை செலுத்தினோமா என இல்லாமல் இதென்ன கேமராவை பார்த்தவுடன் நீலிக் கண்ணீர் வடிப்பது என கேள்வி எழுப்பியுள்ளனர். தண்ணீரே வராமல் துடைத்தார் பாருங்க என்ற கமென்ட்களும் வருகின்றன. காந்தி பிறந்தநாளை நாடே கொண்டாடி வரும் நிலையில் ஃபெரோஸ் கானும் அவரது ஆதரவாளர்களும் அழுது கொண்டே கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.