ஜெ. அடித்ததாக டெல்லி போலீசில் சசிகலா புஷ்பா திடீர் புகார்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாகவும் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுமாறு மிரட்டுவதாகவும் டெல்லி போலீசில் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா புகார் கூறியுள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை சரமாரியாகத் தாக்கினார் சசிகலா புஷ்பா. இது தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புஷ்பாவிடம் ஜெயலலிதா விசாரணை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, தம்மை ஜெயலலிதா அடித்தார்; எம்பி பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கிறார்; நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றெல்லாம் கதற நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் அவர் அதிரடியாக அதிமுகவில் இருந்தும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

சசிகலா புஷ்பா மீது புகார்

சசிகலா புஷ்பா மீது புகார்

அத்துடன் தமக்கு பாதுகாப்பு கோரி டெல்லி நீதிமன்றத்திலும் சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்தார். இதனிடையே தமிழகத்தில் சசிகலா புஷ்பா அடுத்தடுத்து புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

முன்ஜாமீன்

முன்ஜாமீன்

சென்னையில் உள்ள சசிகலா புஷ்பாவின் கணவர், கொலை மிரட்டல் புகாரில் கைது செய்யப்படலாம் என்பதால் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா மீது டெல்லி போலீசில் சசிகலா புஷ்பா ஒரு புகார் கொடுத்துள்ளார்.

டெல்லி போலீஸில் புகார்

அதில், என்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஜெயலலிதா மிரட்டி வருகிறார். அவர் இது தொடர்பாக என்னை அடித்தார். எம்பி பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்வதாகவும் மிரட்டல் வருகிறது.

வாழ முடியாது...

வாழ முடியாது...

எனக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாவிட்டால் ஒருநிமிடம் கூட வாழமுடியாது. அதிமுகவினரால் நான் மிரட்டப்படலாம்... கொல்லப்படலாம் என சசிகலா புஷ்கா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+