மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பாமல் தடுக்கக் கோரி சுப்ரீ்ம் கோர்ட்டில் வங்கிகள் வழக்கு
டெல்லி: பல ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகளில் கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாமல் உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்து அவர் நாட்டை விட்டு தப்பிஓடி விடாமல் தடுக்கக் கோரி வங்கிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இணைந்து இன்று இந்த வழக்கைத் தாக்கல் செய்தன. இந்த மனுவை நாளை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுக்கிறது.
பாரத ஸ்டேட் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க் உள்பட பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கியுள்ளார் மல்லையா. ஆனால்எதையுமே திருப்பிச் செலுத்தவில்லை.

இந்த நிலையில் தனது யுனைட்டெட் புரூவரிஸ் நிறுவனத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த டியாஜியோவிடம் விற்று விட்டார். அதன் பின்னர் அதன் தலைவர் பதவியிலிருந்தும் விலகி விட்டார். டியாஜியோ நிறுவனம் மல்லையாவுக்கு ரூ. 515 கோடி நிதியையும் அளித்துள்ளது.
ஆனால் இந்தப் பணத்தை மல்லையா பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி கடன் மீட்பு தீர்ப்பாயத்தை பாரத ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட வங்கிகள் அணுகின. அதை விசாரித்த தீர்ப்பாயம் நேற்று அதற்கான இடைக்காலத் தடையை விதித்தது.
இந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் பாரத ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட வங்கிகள் சார்பில் அவசரமாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மல்லையா வெளிநாடு தப்பிச் செல்லமுயலுகிறார். அவரைத் தடுக்க வேண்டும். அவரது பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications