பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை 2018 பிப். 8-க்கு ஒத்திவைப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
டெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை 2019-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதியன்று விசாரிக்க வேண்டும் என சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தினார். ஆனால் இதை நிராகரித்த உச்சநீதிமன்றம் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனிடையே அயோத்திக்கு பதில் லக்னோவில் மசூதி கட்டலாம் என ஷியா தரப்பு யோசனையை முன்வைத்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், குறுகிய காலத்தில் 19,000 பக்க ஆவணங்களை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா எப்படி தாக்கல் செய்தார்? தங்களுக்கும் மனுதாரர்களுக்கும் அனைத்து ஆவணங்களையும் தரவும் இல்லை.
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையின் போதெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. ஆகையால் இந்த வழக்கின் விசாரணையை 2019-ம் ஆண்டு ஜூலை 15-க்கு ஒத்திவைக்க வேண்டும் என வாதிட்டார். மேலும் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் எனவும் கபில் சிபல் உள்ளிட்டோர் வாதிட்டனர்.
இன்றைய விசாரணை குறித்து ஷியா வக்பு வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், லக்னோவில் மசூதி கட்டலாம் என்கிற தங்களது யோசனையை உச்சநீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்திருக்கிறது என்றார். இந்த விசாரணைகளைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications