கர்நாடகாவில் தொடரும் வன்முறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்- தமிழக அரசுக்கும் வார்னிங்! #cauvery
டெல்லி: கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் வன்முறை சம்பவங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகா, தமிழக அரசுகள் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடகா அரசு நீர் திறந்துவிட்டது. இதற்கு எதிராக கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. கடந்த ஒரு வாரகாலமாக கர்நாடகாவில் வன்முறைகள் நீடிக்கின்றன.

இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம், செப்டம்பர் 20-ந் தேதி வரை தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கவும் உத்தரவிட்டது. இதனால் பெங்களூரில் உச்சகட்ட வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
தமிழர் சொத்துகள் தேடி தேடி குறிவைத்து தாக்கப்பட்டன. தமிழக நிறுவனங்கள் குறிவைத்து அடித்து சூறையாடப்பட்டன. இதனால் பெங்களூர் வாழ் தமிழர்கள் அச்சத்தில் உறைந்து போயினர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் தொடரும் வன்முறைகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக, கர்நாடகா அரசுகள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது கடமை. மக்களும் சட்டத்தை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு மாநில அரசுகளும் வன்முறை, போராட்டங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு மாநில அரசு வழக்கறிஞர்கள் மூலம் உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications