பவானிசிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் மனு மீது ஏப். 27-ல் தீர்ப்பு- உச்சநீதிமன்றம்
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்திருந்த மனு மீது வரும் 27-ந் தேதி உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளிக்க உள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தண்டனையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
இம்மேல்முறையீட்டு மனு மீது கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி விசாரணை நடத்தினார். இந்த விசாரணையிலும் அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே ஆஜரானார். ஆனால் குற்றவாளிகளான ஜெயலலிதா உள்ளிட்டோருடன் இணைந்து பவானிசிங் செயல்படுகிறார்; அவரை கர்நாடகா அரசு நியமிக்கவில்லை.. இதனால் அவர் அரசு வழக்கறிஞராக ஆஜராகக் கூடாது.. பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோகூர், பானுமதி ஆகியோர் இருவேறுபட்ட தீர்ப்பளித்தனர். பவானிசிங் ஆஜரானதும் சட்டவிரோதம்.. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையே செல்லாது என்று அதிரடி தீர்ப்பளித்தார் நீதிபதி லோகூர்.
ஆனால் பவானிசிங் 'இன்சார்ஜ்' ஆக நியமிக்கப்பட்டவர் என்பதால் மேல்முறையீட்டு வழக்கிலும் அவர் ஆஜராகலாம்.... தவறு இல்லை என்று நீதிபதி பானுமதி தீர்ப்பளித்தார். இதனால் இருவரும் 3 நீதிபதிகள் பெஞ்சுக்கு பரிந்துரைத்தனர்.
இதனடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகள் பெஞ்ச் அமைக்கப்பட்டது. இதில் நீதிபதிகள் அகர்வால், பிரபுல்ல சந்திர பந்த் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த பெஞ்ச் நேற்று விசாரணையைத் தொடங்கியது. அப்போது அன்பழகன் வழக்கறிஞர் அந்தியர்ஜுனா, ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆகியோர் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்தனர். நீதிபதிகளும் குறுக்கிட்டு சில விளக்கங்களைக் கேட்டுப் பெற்றனர்.
இந்நிலையில் 2வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் வரும் 27-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications