சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை நீடிப்பு- சு.சுவாமி மனு சுப்ரீம்கோர்ட்டில் டிஸ்மிஸ்!
டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடையை ரத்து செய்யக் கோரி பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடை நீடிக்கிறது.
2013-ம் ஆண்டு ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரம் குறித்து விசாரித்த லோதா கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது. இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் பங்கேற்கவில்லை.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை நீக்ககோரி பாஜக எம்பி சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை மீதான தடை சட்ட விரோதமானது, காரணமே இல்லாதது என்றும் சதி நடந்து இருப்பதாகவும் கூறி இருந்தார்.
இந்த மனு மீது விசாரணையின் முடிவில் சுப்பிரமணியன் சுவாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடை தொடரும்.












Click it and Unblock the Notifications