மனைவிகளை மாற்றி மாற்றி உறவு கொள்ளும் கடற்படை அதிகாரிகள்: விசாரணைக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பதவி உயர்வு பெறுவதற்காக தனது கணவர் தன்னை உயர் அதிகாரிகளின் ஆசைக்கு விருந்தளித்ததாக கேரளாவில் பணியாற்றும் கடற்படை அதிகாரியின் மனைவி கூறியது குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் கேரள போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி கடற்படை தளத்தில் பணியாற்றிய அதிகாரியின் மனைவி சுஜாதா கிரண்(26) கடந்த 2013ம் ஆண்டு பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்தார். இந்நிலையில் அவர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

SC orders Kerala Police to set up SIT to probe into wife-swapping charge in Navy

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,

என் கணவர் கமாண்டன்ட் ஒருவரின் மனைவியுடன் உறவு கொண்டதை நான் பார்த்துவிட்டேன். என் கணவரின் அனுமதியோடு கடற்படை அதிகாரிகள் பலர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். கடற்படை அதிகாரிகள் மற்றவர்களின் மனைவிகளுடன் உறவு கொண்டு வருகிறார்கள். இது கடற்படையில் ஒரு வழக்கமாக உள்ளது.

இது பற்றி நான் கொச்சியில் உள்ள ஹார்பர் காவல் நிலையம் மற்றும் அப்போதைய கடற்படை தளபதியிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே, இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூறுகையில்,

சுஜாதா கிரண் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த கேரள போலீஸ் சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும். சிறப்பு விசாரணை குழு தனது விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+