பத்திரிக்கையாளர்களுக்கான ஊதிய குழு பரிந்துரை- ஏப்ரல் முதல் அமல்படுத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவு

இது, உழைக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தித்தாள் பணியாளர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
மஜிதியா ஊதிய வாரிய பரிந்துரைகளுக்கு எதிராக செய்தித்தாள் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவைப் பிறப்பித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், பத்திரிகையாளர்களுக்கான ஊதியப் பரிந்துரைகளில் சரியான முறையே பின்பற்றப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
மஜிதியா ஊதியக் குழு பரிந்துரைகளை வரும் ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், நவம்பர் 11, 2011-ல் இருந்து மார்ச் 2014 காலக்கட்டத்துக்கான நிலுவைத் தொகையை ஊழியர்களுக்கு 4 தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஜிதியா குழுவின் பரிந்துரையின்படி, பத்திரிகை நிறுவனங்கள் அவைகளின் ஆண்டு வருவாயின் அடிப்படையில் 8 பிரிவுகளாகவும், செய்தி நிறுவனங்கள் 4 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன என்றும், பத்திரிக்கை நிறுவனங்களில் முதல் 4 பிரிவுகளின் கீழ் வரும் பத்திரிகைகளில் பணியாற்றும் இதழாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் 35 விழுக்காடும், மற்ற நான்கு பிரிவுகளில் பணியாற்றுவோருக்கு 20 விழுக்காடும் மாறுபடும் என தெரிகிறது.
ஊதியம் மட்டுமின்றி, போக்குவரத்து, வீட்டு வாடகைப் படி ஆகியவனவும் இந்திய நகரங்களின் தர நிலை நிர்ணயத்திற்கேற்ப வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ற வகையில் படிகளும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மஜிதியா குழு பரிந்துரைத்துள்ளது.












Click it and Unblock the Notifications