ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களின் கண்காணிப்பு தேவையில்லாத நிலை வரப்போகிறது: அமித் ஷா அதிரடி
ஜம்மு: ‛‛ஜம்மு காஷ்மீரில் இன்னும் சில ஆண்டுகள் முழுமையாக அமைதி நிலவும். இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்களின் கண்காணிப்பு தேவை இருக்காது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் மவுலானா ஆசாத் மைதானத்தில் சிஆர்பிஎப் அமைப்பின் எழுச்சி தினவிழா இன்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
சிஆர்பிஎப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அமித்ஷா ஏற்று கொண்டார். அதன்பின் அவர் விழாவில் பேசினார். அப்போது அவர் சிஆர்பிஎப் குறித்து பெருமையாக பேசினார். அவர் கூறியதாவது:

அமைதி நிலவும்
காஷ்மீர், நக்சல் நடமாட்ட பகுதி, வடகிழக்கு மாநிலங்கள் என 3 இடங்களில் தான் நீங்கள்(சிஆர்பிஎப் வீரர்கள்) பணியில் ஈடுபட்டுள்ளீர்கள். அடுத்த சில ஆண்டுகளில் இந்த 3 பகுதிகளிலும் அமைதி நிலவும் என்பதை உறுதியாக கூறுகிறேன். அதன்பிறகு அங்கு சிஆர்பிஎப் வீரர்களின் கண்காணிப்பு தேவைப்படாது. இது உறுதி. இது நிறைவேறினால் அதற்கான முழு பெருமையும் சிஆர்பிஎப் படையையே சேரும்.

சாதனை
மேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்து மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். இதனால் காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்து அமைதி திரும்புகிறது. இதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். இது நமது பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது.

முக்கிய பங்கு
இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்கும் பணியை சிஆர்பிஎப் படைப்பிரிவு நீண்ட காலமாக செய்து வருகிறது. இக்கட்டான சூழலில் மக்களை மீீட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்து அமைதியாக வாக்களிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கும் பணியில் சிஆர்பிஎப் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

4 ல் ஒரு பங்கு
ஆண்டுதோறும் டெல்லியில் தான் விழா சிஆர்பிஎப் எழுச்சி தினவிழா நடத்தப்படும். இந்த முறை முதன் முதலாக முதன் முதலாக ஜம்மு காஷ்மீரில் விழா நடத்தப்பட்டுள்ளது. சிஆர்பிஎப் பிரிவில் 4ல் ஒரு பங்கு வீரர்கள் பதற்றமான ஜம்மு காஷ்மீரில் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் ஜம்மு காஷ்மீர் போீசார், எல்லை பாதுகாப்பு படையினர். தொழிற்பாதுகாப்பு படையினர், எஸ்எஸ்பி படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370யை மத்திய அரசு 2019 ஆகஸ்ட் 5 ல் ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications