காவிரி வழக்கு எதிரொலி.. தங்கள் மாநில முதல்வர் வீட்டுக்கே பாதுகாப்பை அதிகரிக்கும் நிலையில் காவல்துறை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கடந்த 12ம் தேதி மைசூரிலுள்ள கர்நாடக முதல்வரின் இல்லத்தில் சில விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்பதற்காக, இன்று முன்னெச்சரிக்கையாக பெங்களூரிலுள்ள மற்றும் மைசூரிலுள்ள முதல்வர் சித்தராமையாவின் இல்லங்களில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 12ம் தேதி காவிரி பங்கீடு தொடர்பான கர்நாடக அரசின் சீராய்வு மனு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம், வரும் 20ம் தேதிவரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று, அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அன்று பெங்களூரில் பெரும் கலவரம் வெடித்தது.

Security stepped up outside Chief Ministers residence in Bengaluru

இந்நிலையில் அதே வழக்கின் தொடர்ச்சி இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நகரமெங்கும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 12ம் தேதி மைசூரிலுள்ள முதல்வரின் இல்லத்தில் சில விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்பதற்காக, இன்று முன்னெச்சரிக்கையாக பெங்களூரிலுள்ள மற்றும் மைசூரிலுள்ள முதல்வர் சித்தராமையாவின் இல்லங்களில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வழக்கில் கர்நாடகாவுக்கு எதிராக உத்தரவு வந்தால், சொந்த மாநில முதல்வர் என்றும் பாராமல், அவர் வீட்டு மேலே கூட தாக்குதல் நடத்த சில விஷமிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கொடுத்த தகவலே இதற்கு காரணம்.

பஸ், ரயில் நிலையங்கள், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+