ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான்
Subscribe to Oneindia Tamil

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் செய்தித்தாள்கள் மற்றும் இன்டர்நெட்டில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்கானின் குடும்பத்தார் ஊழல் செய்வதாக விளம்பரம் கொடுத்துள்ளது.
பேராசை பிடித்த குடும்பம் ஒன்று மத்திய பிரதேசத்தை சுரண்டுகிறது என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த விளம்பரம் கொடுத்த அதே அளவில் அந்த புகாரை வாபஸ் பெறுவதாக காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும், இல்லை என்றால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி சவ்கான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸ் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கன்டி லால் புரியாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications