சுத்தமான இந்தியா: குப்பையை அள்ளிய சானியா- ஷாருக்கானுக்கு சவால்
ஹைதராபாத்: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சுத்தமான இந்தியா சவாலை ஏற்று கையில் துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்தார்.
காந்தி ஜெயந்தி அன்று பிரதமர் நரேந்திர மோடி சுவச் பாரத் அபியான் என்ற சுத்தமான இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்து தன் கையில் துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்தார். மேலும் உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரை சுத்தமான இந்தியா சவாலை ஏற்குமாறு கூறினார். அவர்களும் சவாலை ஏற்றனர்.
இந்நிலையில் பல பிரபலங்களும் சுத்தமான இந்தியா சவாலை ஏற்றுள்ளனர். அந்த பட்டியலில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் சேர்ந்துள்ளார்.
சானியா
சானியா சுத்தமான இந்தியா சவாலை ஏற்று ஹைதராபாத்தில் பொது இடத்தை சுத்தம் செய்து அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஷாருக்கான்
சவாலை ஏற்ற சானியா நடிகர்கள் ஷாருக்கான், ரித்தேஷ் தேஷ்முக், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், தெலுங்கானா அமைச்சர் கேடிஆர் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.
மோடி
சுத்தமான இந்தியா சவாலை ஏற்ற சானியா மிர்சாவை பாராட்டி பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
ஷோபா டே
பிரபல எழுத்தாளர் ஷோபா டேயும் சுத்தமான இந்தியா சவாலை ஏற்றார். மேலும் அவர் ராஜ்தீப் சர்தேசாய், பியூஷ் பாண்டே, யஷ் பிர்லா ஆகியோரை இந்த சவாலை ஏற்குமாறு கூறியுள்ளார்.