For Daily Alerts
Just In
மும்பை: கடும் அதிர்வில் சிக்கிய சிங்கப்பூர் விமானம்: 22 பேர் காயம்
மும்பை: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மும்பையில் தரையிறங்குகையில் கடும் அதிர்வில் சிக்கியது. இதில் 8 பயணிகள் உள்பட 22 பேர் காயம் அடைந்தனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 408 பயணிகள் மற்றும் 25 ஊழியர்களுடன் சிங்கப்பூரில் இருந்து மும்பைக்கு கிளம்பியது.
விமானம் மும்பையில் தரையிறங்கும்போது டர்புலன்ஸ் எனப்படும் அதிர்வில் சிக்கியதில் 88 பயணிகள் மற்றும் 14 ஊழியர்கள் காயம் அடைந்தனர். விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு காயம் அடைந்த 22 பேரும் அந்தேரி பகுதியில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்கு பிறகு 6 பயணிகள் மற்றும் 14 ஊழியர்கள் வீடு திரும்பினர். ஆனால் 2 பயணிகள் மட்டும் மருத்துவமனையில் தங்கி தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
English summary
In a close shave, a packed super jumbo aircraft of Singapore Airlines with over 430 people on board was hit by sudden turbulence during descent here, leaving eight passengers and 14 crew members injured.
Story first published: Monday, October 20, 2014, 10:55 [IST]