Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாக்கடை பிரச்சினை... தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 6 பேர் - போலீஸ் குவிப்பு

கழிவு நீர் கால்வாய் பிரச்சினைக்காக 12 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அக்கம் பக்கத்து சண்டை அடிதடியில் முடியும், ஆனால் இளம் பிஞ்சை கசக்கி போட்டுள்ளனர் கயவர்கள்.

Subscribe to Oneindia Tamil

கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் பக்கத்து வீட்டு சண்டை படுபாதக செயலில் முடிந்துள்ளது. சாக்கடை பிரச்சினைக்காக தலித் சிறுமியை ஆறுபேர் கொண்ட கும்பல் குடும்பத்தினரின் கண் முன்னாலேயே சீரழித்துள்ளனர்.

கோரக்பூரில் இந்த அதிரவைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஷி நகர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூரில் உள்ள சிறுமியின் குடும்பத்தினருக்கும், கடந்த வெள்ளிக்கிழமையன்று பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது தொடர்பாக சண்டை நடந்துள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் கழிவுநீர் கால்வாய் கட்ட முடிவு செய்தனர். அதற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து சண்டை போட்டுள்ளனர்.

Six men molest minor girl after dispute over drainage channel

மாலை நேரத்தில் வீட்டில் இருந்த சிறுமியை இழுத்துக்கொண்டு போய் குடும்பத்தினர் கண் முன்னிலையிலேயே கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தயாரும், சிறுமியும் போலீசில் புகார் அளித்துள்ளனர். 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். தப்பி ஓடி தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

சிறுமியை பாலியன் வன்கொடுமை செய்தவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+