For Daily Alerts
Just In
மணிப்பூர் திரிணாமுல் காங்கிரஸில் பிளவு! 7 எம்.எல்.ஏக்களில் 6 பேர் சஸ்பென்ட்!!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ளது. அக்கட்சியின் 7 எம்.எல்.ஏக்களில் 6 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். அண்மைக்காலமாக திரிணாமுல் காங்கிரஸில் கோஷ்டி பூசல் நிலவி வந்தது.
இதன் உச்சகட்டமாக கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 எம்.எல்.ஏக்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேலிடம் அதிரடியாக நீக்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து அம்மாநில சட்டசபையில் அந்த 6 எம்.எல்.ஏக்களும் எந்த கட்சியும் சாராத உறுப்பினர்கள் என்று அங்கீகரிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
Comments
English summary
Out of the seven MLAs of Manipur Pradesh Trinamool Congress, six MLAs have been suspended from the party’s primary membership for anti-party activities and an enquiry is going on against them.
Story first published: Sunday, June 15, 2014, 13:55 [IST]