ராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று அதிகாலை 5:24 மணிக்கு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக சிறிய அளவிலான நிலநடுக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கம், அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

பெரிய நிலநடுக்கம் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சிறிய சிறிய நிலநடுக்கங்கள் பெரிய பாதிப்பின் தொடக்க புள்ளியாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தானில் இன்று அதிகாலை 5:24 மணிக்கு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. ராஜஸ்தானின் பிகேனர் பகுதிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கிருந்த வீடுகள் லேசாக குலுங்கியது.
இது சிறிய அளவிலான நிலநடுக்கம் என்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக ராஜஸ்தானில் எங்கும் பெரிதாக சேதம் எதுவும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications