பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருந்தால் என்ன, இந்தியாவிடம் தான் 'லாலு குண்டு' இருக்கே!
பாட்னா: பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் என்ன என்னை பிரதமர் ஆக்கினால் அவர்கள் லாலு குண்டை சமாளிக்க வேண்டி வரும் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் அண்மை காலமாக ஜாலி மூடில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்திருந்தார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், அணு ஆயுதம் உள்ள பாகிஸ்தானுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளத் தெரியும் என்று பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியது பற்றி கேட்டனர்.
அதற்கு அவர் கூறுகையில்,
என்னை பிரதமர் ஆக்கினால் பாகிஸ்தான் லாலு குண்டை சமாளிக்க வேண்டி இருக்கும். நரேந்திர மோடியின் அரசு தோல்வி அடைந்துள்ளது. இது வியாபாரிகள் நடத்தும் அரசு. இதனால் தேசத்தை காப்பாற்ற முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications