காஷ்மீரில் விடிய விடிய துப்பாக்கிச்சூடு: 4 தீவிரவாதிகள், ராணுவ வீரர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா மாவட்டத்தில் உள்ள வில்காம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநில போலீசார், ராணவ வீரர்கள் வில்காம் கிராமத்திற்கு சென்றனர்.
அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அவர்களும் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நேற்று மாலை துவங்கிய துப்பாக்கிச்சூடு விடிய விடிய நடைபெற்றது.
இதில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அதே சமயம் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள லாதூரா கிராமத்தில் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே 9 மணிநேரம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ராணுவ வீரர் ஒருவர் உயிர் இழந்தார்.