இங்கிலாந்து ராணியை விட பெரும் பணக்காரரா சோனியா காந்தி...?
டெல்லி: உலகிலேயே 12வது பெரும் பணக்காரர் சோனியா காந்தி என்று கடந்த ஆண்டு ஹப்பிங்டன் போஸ்ட் ஒரு செய்தி வெளியிட்டது. அதாவது இங்கிலாந்து ராணி 2ம் எலிசெபத்தை விட சோனியாவிடம் அதிக சொத்துக்கள் இருப்பதாக அது கூறியிருந்தது.
இதுகுறித்து விரிவாக விசாரிக்கப்படவேண்டும் என்று தற்போது பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கருப்புப் பணப் பதுக்கல் குறித்து விரிவான விசாரணை தேவை என்பது அவரது வாதமாகும்.

இது சோனியாவின் பணம் அல்ல, இந்திய மக்களின் பணம், இதை மீட்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
சோனியா காந்திக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக ஹப்பிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. அதேசமயம், ராணி 2ம் எலிசெபெத்தை விட இது அதிகமாகும். மேலும் சிரிய அதிபர் பஷர் அல் அஸ்ஸாத், ஓமன் சுல்தான் குபாஸ் பின் சயத் ஆகியோரை விட அதிக பணக்காரராகவும் சோனியா திகழ்கிறார்.
பல மன்னர்கள், அதிபர்கள், சுல்தான்கள், ராணிகள் இடம் பெற்றுள்ள இப்பட்டியலில் சாதாரண ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பெயர் இடம் பெற்றிருப்பது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு இந்தப் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து ராம்ஜேத்மலானி கூறுகையில் ராஜீவ் காந்திக்கே 2.2 பி்ல்லின் டாலர் கருப்புப் பணம் இருப்பதாக ஒரு புகார் உள்ளது. இதுகுறித்தும் சோனியாவின் சொத்து குறித்தும், கருப்புப் பணம் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications