டெல்லியில் சோனியா, ராகுல், பிரியங்கா.. வெளிநாடு போனது எதற்காக? மர்மம் நீடிப்பு!
டெல்லி: வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துடன் டெல்லி திரும்பியுள்ளார். இருப்பினும் சோனியா காந்தி குடும்பத்துடன் எந்த நாட்டுக்கு எதற்கு சென்றார் என்ற மர்மம் தொடர்கிறது.
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் திடீரென காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு ஒன்றுக்குப் போனார். சுமார் 50 நாட்கள் வெளிநாட்டில் இருந்து விட்டு அவர் நாடு திரும்பினார். அவர் எந்த நாட்டுக்குப் போனார்? எதற்காக இந்த திடீர் தலைமறைவு ஓய்வு பயணம்? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை.

இந்நிலையில் கடந்த வாரமும் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் வெளிநாடு சென்றனர். அவர்களைத் தொடர்ந்து ராகுல் காந்தியும் வெளிநாடு புறப்பட்டுச் சென்றனர்.
ஒட்டுமொத்த சோனியா குடும்பமே எந்த நாட்டுக்குப் போனது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ராகுல் காந்தியின் திருமண விஷயமாகத்தான் வெளிநாடு சென்றுள்ளனர் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சோனியா, பிரியங்கா, ராகுல் அனைவரும் தற்போது டெல்லி திரும்பியுள்ளனர். எனினும் இவர்களது வெளிநாட்டு பயணத்துக்கான காரணம் குறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications