திருமண பந்தத்துக்கு வெளியே பாலுறவு கொள்ளும் பெண்களை தூக்கில்தான் போடனும்- அபு ஆஸ்மி
மும்பை: திருமண பந்தத்துக்கு வெளியே பாலியல் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கில் போட வேண்டும் என்ற தனது கருத்தை மகாராஷ்டிரா பெண்கள் ஆணையத்தில் ஆஜராகி அபு ஆஸ்மி உறுதிப்பட தெரிவித்தார்.
பெண்கள் திருமண பந்தத்துக்கு வெளியே வேறு ஒரு ஆணுடன் உறவு வைத்தால், அந்த பெண்ணை தூக்கில் போட வேண்டும் என்று மராட்டிய மாநில சமாஜ்வாடி கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அபு ஆஸ்மி சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டார்.

பெண்களின் மனதை புண்படுத்தும்படி பேசியதற்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு மகாராஷ்டிரா பெண்கள் ஆணையம் சம்மன் அனுப்பியது.
அதன்படி, அபு ஆஸ்மி நேற்று பெண்கள் கமிஷனில் அதன் தலைவர் சுஷிபென் ஷா முன்னிலையில் ஆஜரானார். அப்போது, எழுத்துப்பூர்வமாக அவர் விளக்கம் அளித்தார்.
அதில், திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை உறுதிப்பட தெரிவித்தார்.
பின்னர் அபு ஆஸ்மி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''எங்களது மதம் திருமண பந்தத்துக்கு வெளியே பெண்களை பாலியல் உறவு வைக்க அனுமதிக்காது. ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தை மீறியோ அல்லது பரஸ்பர சம்மத்துடன் உறவு வைத்தாலும் அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். தாமாக முன் வந்து ஆணுடன் பாலியல் உறவு வைத்து கொள்ளும் அவர்கள், பின்னர் ஆண்கள் மீது புகார் கொடுக்கிறார்கள். இதனால் பேரழிவு விளைவுகள் ஏற்படுகிறது" என்றார்.
பெண்கள் ஆணையம்
அதேசமயம், பெண்கள் ஆணைய தலைவர் சுஷிபென் ஷா, ''இந்திய அரசியலமைப்பு சட்டம், உச்ச நீதிமன்றம் போன்றவை குடும்ப வன்கொடுமை சட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது முஸ்லிம் பெண்கள் உள்பட அனைத்து மத பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது என்று கூறினார்.
நமது நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தும் சாதி, மதம், இனம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அனைத்து பெண்களுக்கும் சமமானது. சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் இதுபோன்ற பிற்போக்கு கருத்துக்களை வெளியிடக்கூடாது" என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications