திருமண பந்தத்துக்கு வெளியே பாலுறவு கொள்ளும் பெண்களை தூக்கில்தான் போடனும்- அபு ஆஸ்மி
மும்பை: திருமண பந்தத்துக்கு வெளியே பாலியல் உறவு வைத்து கொள்ளும் பெண்களை தூக்கில் போட வேண்டும் என்ற தனது கருத்தை மகாராஷ்டிரா பெண்கள் ஆணையத்தில் ஆஜராகி அபு ஆஸ்மி உறுதிப்பட தெரிவித்தார்.
பெண்கள் திருமண பந்தத்துக்கு வெளியே வேறு ஒரு ஆணுடன் உறவு வைத்தால், அந்த பெண்ணை தூக்கில் போட வேண்டும் என்று மராட்டிய மாநில சமாஜ்வாடி கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அபு ஆஸ்மி சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டார்.

பெண்களின் மனதை புண்படுத்தும்படி பேசியதற்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு மகாராஷ்டிரா பெண்கள் ஆணையம் சம்மன் அனுப்பியது.
அதன்படி, அபு ஆஸ்மி நேற்று பெண்கள் கமிஷனில் அதன் தலைவர் சுஷிபென் ஷா முன்னிலையில் ஆஜரானார். அப்போது, எழுத்துப்பூர்வமாக அவர் விளக்கம் அளித்தார்.
அதில், திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை உறுதிப்பட தெரிவித்தார்.
பின்னர் அபு ஆஸ்மி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''எங்களது மதம் திருமண பந்தத்துக்கு வெளியே பெண்களை பாலியல் உறவு வைக்க அனுமதிக்காது. ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தை மீறியோ அல்லது பரஸ்பர சம்மத்துடன் உறவு வைத்தாலும் அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். தாமாக முன் வந்து ஆணுடன் பாலியல் உறவு வைத்து கொள்ளும் அவர்கள், பின்னர் ஆண்கள் மீது புகார் கொடுக்கிறார்கள். இதனால் பேரழிவு விளைவுகள் ஏற்படுகிறது" என்றார்.
பெண்கள் ஆணையம்
அதேசமயம், பெண்கள் ஆணைய தலைவர் சுஷிபென் ஷா, ''இந்திய அரசியலமைப்பு சட்டம், உச்ச நீதிமன்றம் போன்றவை குடும்ப வன்கொடுமை சட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது முஸ்லிம் பெண்கள் உள்பட அனைத்து மத பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது என்று கூறினார்.
நமது நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தும் சாதி, மதம், இனம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அனைத்து பெண்களுக்கும் சமமானது. சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் இதுபோன்ற பிற்போக்கு கருத்துக்களை வெளியிடக்கூடாது" என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications