பெரும் பரபரப்பு! மேற்கு வங்கத்தில் நடுவானில் புயலில் சிக்கிய விமானம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூர் அருகே தனியார் உள்நாட்டு விமானம் புயலில் சிக்கி தட்டுத் தடுமாறியதால் பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூர் நோக்கி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் பி737 விமானம் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. 40 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூரில் உள்ள காஜி நஜ்ருல் இஸ்லாம் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது.
Recommended Video
அப்போது அங்கு வீசிய பலத்த புயலில் விமானம் சிக்கியதால் தரையிறங்க முடியாமல் தட்டுத் தடுமாறியது. விமானம் பயங்கரமாக குழுங்கியதால் சீட் பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்த பயணிகள் கீழே விழுந்தனர். சிலர் மீது விமானத்திற்குள் இருந்த பொருட்கள் விழுந்தன. 2 பயணிகள் மீது விமானத்தில் உணவு கொண்டு செல்லும் தள்ளுவண்டி விழுந்ததில் அவர்கள் படுகாயமடைந்தார்.
திராவிட மாடல் ஆட்சியை நாடெங்கும் சேர்க்கும் முயற்சி -மாணவரணி மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
நடுவானில் புயலில் சிக்கியதை அறிந்த விமானி அவசரமாக அண்டால் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முயன்றார். புயல் காரணமாக 3 முறை விமானம் நடுவானில் குலுங்கியதாக விமானத்தில் சென்ற பயணி தெரிவித்து உள்ளார். பலரும் சீட் பெல்டுகள் அணிந்து இருந்ததாகவும், ஆனால், அதிர்வின் காரணமாக சீட்டை விட்டு பயணிகள் குதித்ததாகவும் பயணிகள் கூறுகின்றனர்.
இதனால் விமானத்தில் சென்ற 40 பேர் காயமடைந்து அண்டால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் படுகாயமடைந்த 10 பேர் தவிர மற்றவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். படுமாயமடைந்த 10 பேருக்கும் காயங்கள் அதிகம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஆனாலும் உயிருக்கு ஆபத்தில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.