ஜெயலலிதா பற்றிய அவதூறு கட்டுரை: இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம்!
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அநாகரிகமான அவதூறு கட்டுரை வெளியிட்டதற்காக இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் பிரச்சனைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி வருகிறார். இதனை கொச்சைப்படுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் கீழ்த்தரமான கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது.
இதற்கு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒருமித்த குரலில் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இலங்கை அரசை மன்னிப்பு கேட்க செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மன்னிப்பு கேட்ட இலங்கை
நிலைமை விஸ்வரூபமெடுத்ததால் இலங்கை அரசு பணிந்தது. வேறுவழியின்றி தமது இணையதளத்தில் போட்ட கீழ்த்தரமான கட்டுரையை நீக்கிய கையோடு, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது.

தூதரகத்தை இழுத்து மூடுக
ஆனாலும் தமிழகத்தின் கொந்தளிப்பு அடங்கவில்லை. தமிழக திரைத்துறையினர் இலங்கை தூதரகத்தை இழுத்து மூடக் கோரி நேற்று போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபக்சே பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது..
இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிரொலித்தது. இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

மத்திய அரசு கண்டனம்
பின்னர் ராஜ்யசபாவில் பேசிய் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கைக்கு கடும் கண்டனத்தை மத்திய அரசு தெரிவிப்பதாக கூறினார். மேலும் இலங்கைக்கான தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இலங்கை தூதருக்கு சம்மன்
இதனடிப்படையில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் சுதர்சன் செனிவிரத்னவேக்கு மத்திய அரசு நேற்று சம்மன் அனுப்பி வரவழைத்தது. அப்போது, இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தில் ஜெயலலிதா குறித்த அவதூறு கட்டுரை வெளியிடப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எச்சரிக்கை
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்றும் இலங்கை தூதரிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications