"ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்"- ஜன. 16-ல் தொடக்கம்: பிரதமர் மோடி
டெல்லி: "தொடங்கிடு இந்தியா... எழுந்திடு இந்தியா" அதாவது "ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா" என்ற திட்டத்திற்கான ஆக்ஷன் திட்டத்தை ஜனவரி 16-ந் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் என்ற பெயரில் ரேடியோவில் உரையாற்றி வருகிறார். இன்றும் அவர் நாட்டு மக்களுக்கு ரேடியோ மூலம் உரையாற்றினார். புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அவர் தனது உரையை துவங்கினார்.
மோடியின் மான் கி பாத் உரையின் விபரம் வருமாறு,

புத்தாண்டு
நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சுத்தமான இந்தியா குறித்து பல செய்திகள் வருவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.

வங்கிக் கடன்
வங்கியை அணுக வேண்டும் என்று நினைக்காத பாமர மக்களால் கூட இன்று முத்ரா திட்டத்தின் கீழ் எளிதில் கடன் பெற முடிகிறது. சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டபோது உலக மக்கள் அனைவரும் அதில் கலந்து கொண்டனர். இதன் மூலம் இந்தியாவின் பலத்தை நினைத்து நமக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.

மின்சாரம்
ஒரு புதிய கிராமத்திற்கு மின்இணைப்பு வழங்கப்பட்டது குறித்து அறிகையில், அந்த கிராம மக்களின் மகிழ்ச்சி குறித்த செய்தியும் நம்மை வந்து அடைகிறது. இந்த செய்திகள்
மீடியாவை இன்னும் சரியாக அடையவில்லை.

மோடி ஆப்
அனைத்து குடிமக்களும் நரேந்திர மோடி அப்ளிகேஷனை தங்களின் செல்போனில் டவுன்லோடு செய்து என்னுடன் தொடர்பில் இருக்கலாம். நரேந்திர மோடி மொபைல் ஆப்
மூலம் நாம் தொடர்பில் இருக்கலாம். பல நல்ல விஷயங்கள் பற்றி மக்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.

துவங்கிடு இந்தியா
வரும் ஜனவரி மாதம் 16ம் தேதி துவங்கிடு இந்தியா, எழுந்திடு இந்தியா(ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா) என்ற திட்டத்திற்கான ஆக்ஷன் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டம் இளைஞர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு ஆகும்.

விவேகானந்தா
1995ம் ஆண்டில் இருந்து ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான
கொண்டாட்டம் ஜனவரி 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை சத்தீஸ்கரில் உள்ள ராய்பூரில் நடைபெறும். இதில் நாடு முழுவதிலும் இருந்து 10 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இளைஞர்கள் திருவிழாவுக்கு சிறந்த ஐடியாக்களை அளியுங்களேன்? தயவு செய்து உங்களின் ஐடியாக்களை நரேந்திர மோடி அப்ளிகேஷனில் தெரிவிக்கவும்.

கின்னஸ் சாதனை
நேரடி மானியத் திட்டம் மூலம் மானியத் தொகை மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நேரடி மானியத் திட்டமான இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலைகள்
வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி நாட்டில் உள்ள பெரும்தலைவர்களின் சிலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்ய முயற்சி செய்வோம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ












Click it and Unblock the Notifications