தேவாலயத்திற்கு செல்கிறார்.. ராகுல்காந்தி இந்துவா கிறிஸ்தவரா? சுப்பிரமணிசாமி சந்தேகம்
ராகுல்காந்தி தான் இந்துவா கிறிஸ்தவரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி: ராகுல் காந்தி தான் இந்துவா கிறிஸ்தவரா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி அவப்போது ஏதாவது குதர்க்கமாக பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறித்து சுப்பிரமணிய சாமி சந்தேகம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணிய சாமி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தான் இந்துவா, அல்லது கிறிஸ்தவரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறியுள்ளார். ராகுல்காந்தி தான் ஒரு இந்து தான், கிறிஸ்தவர் அல்ல என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்துக்களின் ஆதரவை பெற குஜராத்தில் இந்து கோவில்களுக்கு சென்று வருகிறார். அதேநேரத்தில டெல்லியில் உள்ள தேவாலயத்திற்கு பலமுறை சென்று பிரார்த்தனை செய்துள்ளார் என்றும் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார். சுப்பிரமணிய சாமியின் இந்த சந்தேகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications