சுனந்தா வழக்கில் ஒன்னுமே புரியல: மருத்துவ குழுவை அமைக்க டெல்லி போலீஸ் கோரிக்கை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ய மருத்துவ குழு ஒன்றை அமைக்க சுகாதார சேவைகளின் டைரக்டர் ஜெனரலுக்கு டெல்லி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் தெற்கு டெல்லியில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுனந்தா தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். சுனந்தாவின் உடற்கூறுகள் அமெரிக்காவில் உள்ள எப்.பி.ஐ. ஆய்வகத்திற்கு அனுப்பி அறிக்கை பெறப்பட்டது. சுனந்தா ஆல்பிராக்ஸ் என்ற மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் இறந்தார் என எப்.பி.ஐ. அறிக்கை அளித்தது. அதை வைத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் தனது கருத்தை தெரிவித்தது.
முன்னதாக சுனந்தா கதிர்வீச்சு தன்மை உள்ள பொருளால் இறந்தார் என்று கூறப்பட்டது. சுனந்தா கொலை வழக்கில் டெல்லி போலீசார் சசி தரூரிடம் இதுவரை 3 முறை விசாரணை நடத்தியுள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை அளித்துள்ள அறிக்கையை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாமல் உள்ளது சிறப்பு விசாரணை குழு. இந்நிலையில் சுனந்தா புஷ்கரின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ய மருத்துவ குழு ஒன்றை அமைக்க சுகாதார சேவைகளின் டைரக்டர் ஜெனரலுக்கு சிறப்பு விசாரணை குழு கடிதம் எழுதியுள்ளது.
முன்னதாக சிறப்பு விசாரணை குழு சுனந்தாவின் அறிக்கை குறித்து விளக்கம் கேட்டு எய்ம்ஸ் மருத்துவ குழுவுக்கு கடிதம் எழுதியும் இதுவரை பதில் இல்லை.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications