சுனந்தா வழக்கில் ஒன்னுமே புரியல: மருத்துவ குழுவை அமைக்க டெல்லி போலீஸ் கோரிக்கை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ய மருத்துவ குழு ஒன்றை அமைக்க சுகாதார சேவைகளின் டைரக்டர் ஜெனரலுக்கு டெல்லி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் தெற்கு டெல்லியில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுனந்தா தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். சுனந்தாவின் உடற்கூறுகள் அமெரிக்காவில் உள்ள எப்.பி.ஐ. ஆய்வகத்திற்கு அனுப்பி அறிக்கை பெறப்பட்டது. சுனந்தா ஆல்பிராக்ஸ் என்ற மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் இறந்தார் என எப்.பி.ஐ. அறிக்கை அளித்தது. அதை வைத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் தனது கருத்தை தெரிவித்தது.
முன்னதாக சுனந்தா கதிர்வீச்சு தன்மை உள்ள பொருளால் இறந்தார் என்று கூறப்பட்டது. சுனந்தா கொலை வழக்கில் டெல்லி போலீசார் சசி தரூரிடம் இதுவரை 3 முறை விசாரணை நடத்தியுள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை அளித்துள்ள அறிக்கையை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாமல் உள்ளது சிறப்பு விசாரணை குழு. இந்நிலையில் சுனந்தா புஷ்கரின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ய மருத்துவ குழு ஒன்றை அமைக்க சுகாதார சேவைகளின் டைரக்டர் ஜெனரலுக்கு சிறப்பு விசாரணை குழு கடிதம் எழுதியுள்ளது.
முன்னதாக சிறப்பு விசாரணை குழு சுனந்தாவின் அறிக்கை குறித்து விளக்கம் கேட்டு எய்ம்ஸ் மருத்துவ குழுவுக்கு கடிதம் எழுதியும் இதுவரை பதில் இல்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications