ஜெர்மனி அகதிகள் முகாமில் மகளுடன் சிக்கிய இந்தியப்பெண்... பத்திரமாக மீட்பு... டெல்லி வந்தடைந்தார்!
டெல்லி: கணவர் வீட்டாரின் சதியால் ஜெர்மனி அகதிகள் முகாமில் குழந்தையுடன் தங்கியிருந்த பெண், இந்திய வெளியுறவுத்துறையின் முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டு, டெல்லி வந்தடைந்தார்.
ஜெர்மனியில் வாழ்ந்து வரும் கர்பிரீட் என்ற பெண்மணி சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டிருந்தார். அதில், தனது கணவர் குடும்பத்தாரின் சதியால், தானும் தனது 7 வயது மகளும் ஜெர்மனியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்தத் தகவல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு சென்றது. அதனைத் தொடந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இது தொடர்பாக ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றார்.
தனது டிவிட்டர் பக்கத்திலும் இது குறித்து சுஷ்மா கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் ‘ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து கர்பிரீட் குறித்த தகவல்களைப் பெற்றுள்ளதாக ஒரு டிவிட்டிலும், மற்றொன்றில் இந்த விவகாரம் தொடர்பாக கர்பிரீட்டின் தந்தையிடம் பேசி இருப்பதாகவும், நிச்சயம் அப்பெண்ணிற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக முகாமில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட அப்பெண், தனது மகளுடன் இன்று டெல்லி வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் செய்தியாளர்களிடம், தன்னைப் பத்திரமாக இந்தியா கொண்டு வந்து சேர்த்த மத்திய அரசுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தன்னுடைய நிலைக்கு காரணமானவர்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications