அணு உலையை அமைத்த நிறுவனங்கள் மீது நேரடியாக வழக்கு தொடர முடியாது- மத்திய அரசு விளக்கம்
டெல்லி: இந்தியாவில்அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வந்திருந்த போது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த ஏதுவாக அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், விபத்துக்கு பொறுப்பேற்பது, இழப்பீடு வழங்குவது மற்றும் இழப்பீடு கோருவது தொடர்பான அணுஉலை விபத்து பொறுப்பேற்பு சட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
எனினும், அணுஉலை விபத்து ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அணுஉலையை அமைத்துக் கொடுத்த நிறுவனங்கள் மீது நேரடியாக வழக்கு தொடர முடியாது. அணுஉலையை இயக்குபவர்கள் மட்டுமே வழக்கு தொடர முடியும்" என தெளிவுபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications