நாங்க சொன்னது காவிரி மேலாண்மை வாரியம் இல்லை.. தமிழகத்தின் தலையில் இடியை இறக்கிய சுப்ரீம் கோர்ட்!
நாங்கள் கூறியது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஸ்கீம் தான் என சுப்ரீம்கோர்ட் கூறியிருப்பது தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

டெல்லி: நாங்கள் கூறியது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஸ்கீம் தான் என சுப்ரீம்கோர்ட் கூறியிருப்பது தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அப்போது தமிழகத்துக்கான காவிரி நீரை குறைத்த உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது.
தீர்ப்பில் காவிரி மேலாண்மை ஸ்கீம் என குறிப்பிடப்பட்டிருந்த அந்த வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் என புரிந்துகொள்ளப்பட்டதாக தெரிகிறது.

தொடர் போராட்டம்
இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் காவிரி பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வாரியம் அல்ல ஸ்கீம்
தீர்ப்பை நடைமுறைபடுத்தக்கோரி உச்சநீதிமன்றம் அளித்தத 6 வார கால அவகாசம் கடந்த 29ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதுவரை தீர்ப்பு குறித்து வாய்திறக்காத மத்திய அரசு கடைசி நேரத்தில் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஸ்கீம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றது.

செயல் திட்டம்தான்
மேலும் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தது. இதுகுறித்து இன்று விளக்கமளித்த சுப்ரீம் கோர்ட், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என விளக்கமளித்துள்ளது.

பெரிய பிரச்சனைதான்
மேலும் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கமளித்துள்ளார். தமிழகத்திற்கு இது பெரிய பிரச்சினை தான், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

இடியை இறக்கியுள்ளது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் நாங்கள் கூறியது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல என சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பது தமிழக விவசாயிகளின் தலையில் இடியை இறக்கியுள்ளது.

கேள்விக்குறியாகியுள்ளது
உச்சநீதிமன்றத்தின் இந்த பதிலால் தமிழக விவசாயமும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத தமிழக விவசாயிகள் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications