நாங்க சொன்னது காவிரி மேலாண்மை வாரியம் இல்லை.. தமிழகத்தின் தலையில் இடியை இறக்கிய சுப்ரீம் கோர்ட்!
நாங்கள் கூறியது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஸ்கீம் தான் என சுப்ரீம்கோர்ட் கூறியிருப்பது தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

டெல்லி: நாங்கள் கூறியது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஸ்கீம் தான் என சுப்ரீம்கோர்ட் கூறியிருப்பது தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அப்போது தமிழகத்துக்கான காவிரி நீரை குறைத்த உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது.
தீர்ப்பில் காவிரி மேலாண்மை ஸ்கீம் என குறிப்பிடப்பட்டிருந்த அந்த வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் என புரிந்துகொள்ளப்பட்டதாக தெரிகிறது.

தொடர் போராட்டம்
இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் காவிரி பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வாரியம் அல்ல ஸ்கீம்
தீர்ப்பை நடைமுறைபடுத்தக்கோரி உச்சநீதிமன்றம் அளித்தத 6 வார கால அவகாசம் கடந்த 29ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதுவரை தீர்ப்பு குறித்து வாய்திறக்காத மத்திய அரசு கடைசி நேரத்தில் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஸ்கீம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றது.

செயல் திட்டம்தான்
மேலும் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தது. இதுகுறித்து இன்று விளக்கமளித்த சுப்ரீம் கோர்ட், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என விளக்கமளித்துள்ளது.

பெரிய பிரச்சனைதான்
மேலும் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கமளித்துள்ளார். தமிழகத்திற்கு இது பெரிய பிரச்சினை தான், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

இடியை இறக்கியுள்ளது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் நாங்கள் கூறியது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல என சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பது தமிழக விவசாயிகளின் தலையில் இடியை இறக்கியுள்ளது.

கேள்விக்குறியாகியுள்ளது
உச்சநீதிமன்றத்தின் இந்த பதிலால் தமிழக விவசாயமும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத தமிழக விவசாயிகள் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications