சகாரா நிறுவன தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: சுமார் இருபதாயிரம் கோடி ரூபாய் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி சகாரா நிறுவன தலைவரான சுப்ரதா ராய் மீது தொடரப்பட்ட வழக்கில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பணத்தை செலுத்த தயாராக இருக்கும் நிலையில் தன்னை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யுமாறும் உச்சநீதிமன்றத்தில் சுப்ரதா ராய் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சுப்ரதா ராயின் கோரிக்கையை நிராகரித்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

"சிறப்பு விசாரணை குழு, ஹைகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து உத்தரவுகளையும் சகாரா மீறியுள்ளது. எங்களது முந்தைய உத்தரவுகளையும் ராயும் அவரது குழுமமும் மதிக்காத நிலையில், இந்த ஜாமீன் மனுவுக்கு எந்த தகுதியும் இருப்பதாக தெரியவில்லை.
முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தருவது தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத நிலையில்தான் கைது நடவடிக்கையை நாங்கள் தேர்வு செய்ய வேண்டியதாகி விட்டது. நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது. எங்களது உத்தரவை மதிக்காத செயல் என்பது சட்டத்தின் வேரையே பதம் பார்ப்பது போன்றதாகும்.
இதைப்போன்ற நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்துக்கு உட்பட்டே சுப்ரதா ராய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சிறைக்கு அனுப்புவதற்கு முன்னர் தேவையான அனைத்து சட்டபூர்வ நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம்" என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி தருவதற்கான புதிய திட்டத்தை சுப்ரதா ராய் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மேலும் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கடந்தவாரம் கோர்ட்டில் ஆஜரான சுப்ரதா ராய், டெல்லியில் வெயில் அதிகமாக இருப்பதால் தன்னால் சிறைச்சாலையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை, எனவே ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications