மின்திட்ட விவகாரம்: கும்பகர்ண தூக்கத்தில் மோடி அரசு.. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர்காண்ட் மின் திட்டங்கள் தொடர்பாக உரிய பதிலளிக்காத மத்திய அரசு கும்பர்கண தூக்கத்திலா இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தர்காண்ட் மாநிலம் அலக்நந்தா மற்றும் பகீரதி நதிகளில் 24 மின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

Supreme Courts raps Modi government, calls Centre 'Kumbhakarna'

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 24 திட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து மத்திய அரசு 2 மாத காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போதும் மத்திய அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் ஆடங்கிய பெஞ்ச், மத்திய அரசு அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வேண்டும். இது மத்திய அரசின் தவறு, மத்திய அரசின் இந்த செயல் கும்பகர்ண தூக்கத்தில் இருப்பதைப் போல இருக்கிறது.

மத்திய அரசு அறிக்கையைத் தாக்கல் செய்யும் வரை 24 திட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+