For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டோன்ட் வொரி, கண்டுபிடிச்சுடலாம்: பிரஸ்ஸல்ஸில் மாயமான இன்போசிஸ் ஊழியரின் தாய்க்கு சுஷ்மா ஆறுதல்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு பிரஸ்ஸல்ஸில் மாயமான சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷின் தாயை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த பிறகு அங்கு பணியாற்றி வரும் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் சாப்ட்வேர் என்ஜினியர் ராகவேந்திரன் கணேஷ் மாயமாகியுள்ளார்.

அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் உள்ளது. இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கணேஷின் தாயை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தாய்

ராகவேந்திரனின் தாய் திருமதி அன்னபூரணியிடம் பேசினேன் என்று கூறி மாயமாகியுள்ளவரின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சுஷ்மா.

கணேஷ்

ராகவேந்திரனை பிரஸ்ஸல்ஸில் கண்டுபிடிக்க அனைத்து முயற்சியும் எடுக்கப்படும் என்று சுஷ்மா அவரது தாயிடம் உறுதியளித்துள்ளார்.

போன்

ராகவேந்திரன் பிரஸ்ஸல்ஸில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு அவரது தாயிடம் பேசியுள்ளார். ராகவேந்திரனை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள் என கேட்டுள்ளார் சுஷ்மா.

சகோதரர்

ராகவேந்திராவின் சகோதரர் பிரஸ்ஸல்ஸ் சென்றுள்ளார். அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம் என்று சுஷ்மா ட்வீட் செய்துள்ளார்.

English summary
External Affairs Minister Sushma Swaraj on Wednesday spoke to the mother of Raghavendran Ganesh, an Indian national who has been missing since Tuesday's terror attacks in Belgium's capital Brussels.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X