பிரதமர் மோடி பயணத்துக்கு முன்பாக இலங்கை செல்கிறார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்வதற்கு முன்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ஓரிரு மாதங்களில் இலங்கை செல்லக் கூடும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் அந்நாட்டுக்கு செல்ல இருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு இலங்கை சென்றிருந்தது. அப்போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் அரசியல் தலைவர்களையும் சுஷ்மா தலைமையிலான குழு சந்தித்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி விரைவில் இலங்கை செல்லக் கூடும் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக சுஷ்மா ஸ்வராஜ் அங்கு செல்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications